நடப்பாண்டுக்கான மத்திய பட்ஜெட் 2020 நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், குறிப்பிட்ட மின்சார வாகனங்கள் விலையேற்றத்தைச் சந்திக்கவுள்ளது. இதுதொடர்பான விவரங்களை பார்க்கலாம்.
இந்தியாவின் ஆட்டோத்துறை உற்பத்தியாளர்கள் நடப்பாண்டுக்கான மத்திய பட்ஜெட் மீது மிகுந்த எதிர்பார்ப்புகளை வைத்திருந்தனர். புதிய பட்ஜெட் மீது தங்களுடைய நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என நம்பி இருந்தனர்.
ஆனால் பட்ஜெட் தாக்கலின் போது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிகழ்த்திய உரையில், ஆட்டோத்துறைக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலான அறிவிப்புகளை அவர் வெளியிடவில்லை. இது உற்பத்தியாளர்களை மிகவும் கவலை அடையச் செய்துள்ளது.